For Daily Alerts
Just In
இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட சிப்பாய் கலகம்... 211ஆவது ஆண்டு விழா: வீடியோ
இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் கலகத்தின் 211 ஆண்டு விழா, கோட்டைக்கு முன்புள்ள நினைவுத்தூண் வளாகத்தில் நினைவுகூரப்பட்டது.
வேலூர்: வேலூரில் சிப்பாய் கலகம் ஏற்பட்டு 211 ஆண்டுகள் ஆனதன் நினைவு தின விழா மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இன்று நினைவுகூரப்பட்டது.
வேலூர் கோட்டையில் இந்திய வீரர்கள் சீருடை அணிவது குறித்து ஜூலை 10ஆம் தேதி 1806ஆம் ஆண்டு பெரும் கலகம் ஏற்பட்டது. இதில் ஆங்கிலப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட முதல் எழுச்சிப் போர் என போற்றப்படுகிறது.
வேலூரில் ஏற்பட்ட சிப்பாய் கலகத்தின் 211ஆம் ஆண்டு விழா, வேலூர் கோட்டைக்கு முன்பு உள்ள நினைவுத்தூண் வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமை தாங்கினார்.
மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் கலந்துகொண்டார். இந்த விழாவில் முன்னாள் ராணுவ வீரர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
Comments
English summary
Vellore sepoy revolt's 211 anniversary celebrated and district collector Raman headed the function.
Story first published: Monday, July 10, 2017, 17:33 [IST]