வைகோவின் கோரிக்கையை ஏற்பு.. 4 நாட்களுக்கு பின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற வேல்முருகன்
தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து புழல் சிறையில் வேல்முருகன் நான்காவது நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
Recommended Video

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னை புழல் சிறையில் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை, வைகோவின் கோரிக்கையை ஏற்று வாபஸ் வாங்கினார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுதல் சொல்லச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார்.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில், அவரைக் கைதுசெய்த விழுப்புரம் காவல்துறை அவரை புழல் சிறையில் அடைத்துள்ளது. அங்கு வேல்முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் , மாவட்ட ஆட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும், பலியானோரின் விபரங்களை வெளியிட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுத்தி அவர் நான்காவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.
இதற்கிடையே வேல்முருகனை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சிறையில் சென்று சந்தித்தார். அப்போது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு அவர் வேல்முருகனை கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், வைகோவின் கோரிக்கையை ஏற்று வேல்முருகன் உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கினார். மேலும் அவரோடு உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த 21 கைதிகளும் தங்களது போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications