அதிமுகவின் தலைமை யார்? துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சொன்ன அடடே பதில்
அதிமுகவின் தலைமை யார் என்பதை காலம் சொல்லும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் தலைமை யார் என்பதை காலம் சொல்லும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இரட்டை இலையை மீட்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இரட்டை இலையை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். குடியரசுத்லைவர் தேர்தலில் பாஜகவை ஒருமித்த கருத்துடன் ஆதரித்தது போல் இரட்டை இலையை மீட்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அதிமுகவின் தலைமை யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு காலம் பதில் சொல்லும் என்று மழுப்பலாக கூறிச்சென்றார்.












Click it and Unblock the Notifications