ஆவின் பணத்தை அபேஸ் செய்த அதிகாரிகள். அரசியல் கட்சியினர் உடந்தை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலூர் மாவட்டத்தின் ஆவின் நிறுவன பணத்தை கையாடியதாக அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் சிலரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஆவின் நிறுவன தலைமையகம் வேலூரில் இருக்கிறது. ஆவின் ஏஜென்டுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பணத்தை ஆம்பூர், வாணியம்பாடியில் உள்ள ஆவின் அதிகாரிகள் சிலரிடம் தந்து ரசீது பெற்றுள்ளனர்.

ஆனால் அதிகாரிகளோ பணத்தை ஆவின் நிர்வாகத்திடம் கொடுக்காமல் 'ஆட்டையை' போட்டுள்ளனர். இப்படி மொத்தம் ரூ 60 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேலூரில் முகாமிட்ட சென்னை விஜிலென்ஸ் டீம், 10 அதிகாரிகள் இப்படி பணத்தை அபேஸ் செய்ததை கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது இவர்கள் அனைவரையும் சஸ்பென்ட் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிகாரிகள் பணத்தை கையாடல் செய்ததை ஆவின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள அரசியல் கட்சியினரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். அவர்கள் பற்றியும் அரசுக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலூர் ஆவின் அதிகாரிகள், நிர்வாகத்தில் இருக்கும் அரசியல் கட்சி பிரபலங்கள் பீதியில் இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+