For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்னார்குடியில் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது விக்னேஷ் உடல் #vignesh

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர் விக்னேஷின் இறுதிச் சடங்கு நாளை மன்னார்குடியில் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Vignesh's final ceremony tomorrow

கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து சென்னை எழும்பூரில் நேற்று (15-09-2016) மாலை 3 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியில் தீக்குளித்த தம்பி பா.விக்னேசு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அனைத்து கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன் உயிர் ஈந்த ஈக மறவன் காவிரிச்செல்வன் தம்பி பா. விக்னேஷ் அவர்களின் உடல் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவகத்தில் இன்று (16-09-2016) இரவு 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் இன்றிரவு அவரது உடல் தம்பியின் சொந்தஊரான மன்னார்குடிக்கு எடுத்து செல்லப்பட்டு நாளை (17-09-2016) காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அவரது வீட்டின் முகவரி:

பா. விக்னேசு,
த/பெ பாண்டியன்
கோபால சமுத்திரம் மேலவீதி,
மன்னார் குடி,
திருவாரூர் 614001

இதற்காக தம்பியின் உடலை எடுத்துச்செல்ல காவல்துறையின் அனுமதி கிடைத்துவிட்டதால் அனைவரும் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவகத்தில் அஞ்சலி செலுத்தக் கூடுவோம்!

-இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Naam Tamizhar party has announced that Vignesh's final ceremony will be done in his home town Mannargudi on tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X