ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் கண்ணீர் அஞ்சலி
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இளைய தளபதி விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் நேற்று இரவு 11.30 மணிக்கு இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரது குடும்ப வழக்கப்படி 3 மணிநேரம் சடங்குகள் செய்யப்பட்டது.
அதன் பிறகு அவரது உடல் ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்து. ஜெயலலிதாவின் உடலுக்கு இளைய தளபதி விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை பார்த்ததும் விஜய் கண்ணீர் சிந்தினார். நடிகர் பிரபு தனது குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.