நீட் தேர்வுக்காக பேசினோம்.. பேசுறோம்.. பேசுவோம்.. ஜவ்வாய் இழுக்கும் பிரச்சனை பற்றி விஜயபாஸ்கர்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து கோரி வருகிறோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தொடர்ந்து போராடி வருகிறோம் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை எழுப்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முதுநிலை மருத்துவக்கல்வியில் 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மருத்துவ மேல்படிப்பு இடஒதுக்கீடு வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
நீட் தேர்வு தேவையில்லை என மத்திய அரசிடம் தமிழக அரசு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.
பட்ட மேற்படிப்பு சேர்க்கையில் நீட் தேர்வை ஒத்துக் கொண்டாலும் இடஒதுக்கீடு பாதிக்காது என்றும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.