சிங்கப்பூரில் விஜயகாந்த்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திடீரென சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதாவும் சென்றார்.
சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் போயிருந்தார் விஜயகாந்த். அங்கு அவரது மகன் சண்முகப் பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தின் ஷூட்டிங்கை மேற்பார்வையிட்டு வந்தார்.
அந்த பயணத்தின்போது அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் கூறின. இதை நிரூபிப்பது போல அவர் ஊர் திரும்பியபோது சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வரப்பட்டார்.

இந்த நிலையில் சமீபத்தி்ல் சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அதிரடியாக சந்தித்தார் விஜயகாந்த். அதே வேகத்தில் அடுத்த நாள் பிரதமரைச் சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது கோபமாகி டென்ஷனயைும் காட்டினார். பிறகு சென்னை திரும்பினார்.
இந்தப் பின்னணியில் இன்று திடீரென அவர் சிங்கப்பூர் கிளம்பிச் சென்றார். மனைவியுடன் அவர் புறப்பட்டுப் போயுள்ளார். அவரது பயணம் குறித்து சத்தமே காட்டவில்லை தேமுதிக. அவர் விமான நிலையம் வந்த பிறகுதான் அவர் சிங்கப்பூர் செல்லும் விவரமே தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications