பஞ்சு அருணாச்சலத்துக்கு விஜயகாந்த் நேரில் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
மறைந்த திரையுலக ஜாம்பவான் பஞ்சு அருணாச்சலம் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
விஜயகாந்தை வைத்து நானே ராஜா நானே மந்திரி, வைதேகி காத்திருந்தாள், எங்க முதலாளி உள்பட பல படங்களைத் தயாரித்தவர், கதை திரைக்கதை வசனம் எழுதியவர் பஞ்சு அருணாச்சலம்.

நேற்று முன்தினம் காலமான பஞ்சு அருணாச்சலத்தின் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன. அதற்கு முன் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஏராளமான திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மைத்துனர் எல்கே சுதீஷ் ஆகியோர் நேரில் வந்து பஞ்சு அருணாச்சலம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.













Click it and Unblock the Notifications