மீடியாவுக்கு "நோ" சொன்ன "கேப்டன்" ... அப்பா, அம்மா, தம்பியுடன் செல்பி எடுத்த "பிரபாகரன்"
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் வாக்களித்து விட்டு வீடு திரும்பியதும் செல்பி எடுத்துள்ளார். அதனை விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விருகம்பாக்கம் தொகுதியில்தான் விஜயகாந்த் குடும்பத்துக்கு வாக்கு உள்ளது. அங்கு இன்று காலை விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகப் பாண்டியன் என அனைவரும் சென்று வாக்களித்தனர்.

ஸ்டாலின், அஜித் என பிரபலங்கள் எல்லாம் தாங்கள் வாக்களித்து விட்டோம் என்பதற்கு சாட்சியாக தங்களது கை விரலில் மை இடப்பட்டுள்ளதை ஊடகங்களுக்கு காட்டியபடி, போஸ் கொடுத்தனர்.
ஆனால், தான் வாக்களித்ததும் அவ்வாறு செய்ய மறுத்த விஜயகாந்த், பேட்டியும் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் விஜயகாந்த் கோபத்தில் இருப்பதாகவும், சோகத்தில் இருப்பதாகவும் பல்வேறு ஊகங்கள் உலா வந்தன.
இந்நிலையில், வாக்களித்த பின் வீட்டிற்கு சென்ற விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து செல்பி எடுத்துள்ளார். இதில் விஜயகாந்த் சிரித்த முகமாகக் காட்சி அளிக்கிறார்.
இந்தப் புகைப்படத்தை விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூடவே, ‘அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவது முக்கியம். நாங்கள் செய்து விட்டோம்... நீங்கள்?' என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications