காமராஜர் படி, படி என்றார்.. கருணாநிதி, ஜெயலலிதா குடி, குடி என்கிறார்கள்: விஜயகாந்த் பேச்சு-வீடியோ
Subscribe to Oneindia Tamil
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், தேமுதிக, மக்கள் நல கூட்டணி வேட்பாளர் அறிமுகம் நிகழ்ச்சி விஜயகாந்த் முன்னிலையில் நடைபெற்றது.
விஜயகாந்த் பேசுகையில், காமராஜர் மக்களை படி, படி என்றார். ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரும், மக்களை குடி, குடி என்கிறார்கள்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், மாறி மாறி ஆட்சியில் இருந்தபோதும், மக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை. ஸ்டாலின், ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வருகிறார்கள். இரு கட்சியினருமே, குடிக்க வைத்து தமிழ் மக்களின் குடி கெடுத்தவர்கள். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications