மே 19ம் தேதிக்கு முன்பே அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தலை நடத்த வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 19 ம் தேதிக்கு முன்பாக அரவக்குறிச்சி, தஞ்சையில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை ஜனநாயக முறையில் தேர்தல் ஆணையம் நடத்தவில்லை. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி, புதிய வாக்காளர்கள், இளம் தலைமுறையினர், நடுநிலையாளர்கள் உள்ளிட்டோரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவும், திமுகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இரு கட்சிகளும் பண வினியோகத்தில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
நள்ளிரவு வரை பண வினியோகத்தில் ஈடுபட்டதுடன், வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்களுக்கு பட்டப்பகலில் காவல்துறையினர் எதிரிலேயே பகிரங்கமாக பண வினியோகம் நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் குவிந்தன. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்பட்டனர்.
வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. பெரும் பாலான இடங்களில் ஆளும் கட்சியினரின் அராஜகத்திற்கு பயந்து பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை. பல்வேறு இடங்களில் தேமுதிக வேட்பாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் தேமுதிக தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையினரும் அவர்களுக்கு துணைபோனது கண்டனத்திற்கு உரியது. இதற்கு தேர்தல் ஆணையம் முழு ஒத்துழைப்பு அளித்து, அராஜகக்காரர்களை பாதுகாத்தது பொதுமக்களை மேலும் அச்சமடையச் செய்தது.
மேலும், தமிழகம் முழுவதுமே பண வினியோகம் நடைபெற்று வந்த நிலையில், அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப்பொருள் வினியோகம் செய்யப்பட்டதாகக் கூறி அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஏற்கத்தக்கது அல்ல.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 19-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு திருமங்கலம், சங்கரன்கோவில், ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வகையிலேயே மீண்டும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆகவே, 19-ம் தேதிக்கு முன்பே இரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்''என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications