For Daily Alerts
Just In
வரவேண்டிய நேரத்தில் விஜயகாந்த் வருவார்?: கொறடா சந்திரகுமார்
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா வியாழக்கிழமை உரையாற்றினார். நேற்றைய கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கவில்லை.
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.சந்திரகுமார் கூறியதாவது:
முதல்வரை பாராட்டுகின்ற உரையாகவே, ஆளுநர் உரை உள்ளது. மக்களுக்கான நலத்திட்டம், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை.
ஒட்டுமொத்தமாக ஆளுநர் உரை கவரிங் நகைக்கு, தங்க முலாம் பூசியது போல உள்ளது.
ஜனநாயக முறைப்படி கூட்டத்தொடர் நடந்தால், நாங்களும் ஜனநாயக முறைப்படி நடப்போம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டிய நேரத்தில் கலந்து கொள்வார் என்றார் சந்திரகுமார்.
English summary
DMDK whip V C Chandrakumar has said that his party leader Vijayakanth will attend the assembly when time comes.
Story first published: Friday, January 31, 2014, 10:33 [IST]