காமன்வெல்த்துக்காக கடையையெல்லாம் அடைக்க முடியாது - விக்கிரமராஜா

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை வணிகர் சங்க பேரமைப்பு வரவேற்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 12ந் தேதி கடையடைப்பு நடத்தப்போவதாக சிலர் கூறுகின்றனர். இன்றைய சூழலில் கடையடைப்பு என்பது தேவை இல்லாதது.
ஒவ்வொரு வியாபாரியும் வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள். கடையடைப்பு நடத்தினால் ஒவ்வொரு கடைக்காரரும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படுவார்கள். வேலைக்கு தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. கடையடைப்பு என்றால் தொழிலாளர்கள் ஊருக்கு சென்று விடுவார்கள். பின்னர் மறுநாள் எப்படி கடையை நடத்துவது?
எனவே பொது பிரச்சனைக்காக கடைகளை அடைக்கச் சொல்வது முறையல்ல. காமன்வெல்த் பிரச்சினைக்காக அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம் நடத்துவது ஏற்கத்தக்கது. ஆனால் கடைகளை அடைக்க சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே கடைகளை அடைக்க யாரும் வற்புறுத்தக் கூடாது.
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்தும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை எதிர்த்தும் வருகிற 19ந் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகிறோம். அப்போதும் வியாபாரிகள் கடைகளை அடைக்க மாட்டார்கள். வழக்கம்போல் கடைகள் திறந்திருக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications