கடலில் இயற்கை மாற்றம்.. அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்னிங்!
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என தமிழக வருவாய் நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக வருவாய் நிர்வாக ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வீசிய ஓகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர்.
இதுவரை அவர்கள் கரை திரும்பாததால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஓகி புயல் குறித்து தமிழக அரசு முறையான அறிவிப்பு வெளியிடாததே காரணம் என மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

இயற்கை சீற்றங்கள்
இதையடுத்து வானிலை நிலவரம், இயற்கை சீற்றங்களான மழை, வெயில், கடல் கொந்தளிப்பு குறித்து தமிழக அரசு முன்னரே அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்
இந்நிலையில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது தென் தமிழக கடலோரப் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் இயற்கை மாற்றம்
கடலில் ஏற்படும் இயற்கை மாற்றத்தால் அலையின் சீற்றம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக 18 முதல் 22 விநாடி இடைவெளியில் 2 முதல் 3.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் உயர வாய்ப்பு உள்ளதாகவும் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு - வேண்டுகோள்
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இரண்டரை மீட்டர் உயரத்திற்கு கடல் அலையின் சீற்றம் இருக்கும் என்றும் தமிழ வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் எச்சரித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications