கடும் வறட்சி: அதிமுக வேட்பாளர்கள் விரட்டி அடிப்பால் காவிரியில் திடீர் தண்ணீர் திறப்பு
சேலம்: தமிழகத்தில் நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சத்தை போக்கும் விதமாக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி தான் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகின்றது. குடிப்பதற்கு கூட போதிய குடிநீர் இன்றி பொது மக்கள் அவதிப்படும் அவல நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள் சுமார் 2 முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று குடிநீர் கொண்டு வருகின்றனர். வெள்ளகோவில், திருப்பூர் போன்ற பகுதிகளில் ஒரு குடம் குடிநீர் ரூ. 5க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், காவிரி நதி ஓடும் மாவட்டங்களில் கூட கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாக்கு கேட்டு செல்லும் அதிமுக வேட்பாளர்களை பொது மக்கள் விரட்டுவதும், முற்றுகையிடுவதும், போராட்டம் நடத்துவதும், தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவிப்பு செய்வதுமாக உள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக, காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஆளும் கட்சி அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், மேட்டூர் அணையிலும் தண்ணீர் மிக குறைவாக இருக்கின்ற போதிலும் தேர்தலையும், வறட்சியைும் கருத்தில் கொண்டு தண்ணீர் திறகப்பட்டுள்ளது.
திறக்கப்பட்ட நீர் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை என காவிரி டெல்டா மாவட்டங்களில் பாய்ந்துள்ளது. இதன் காரணமாக இன்னும் ஒரு 15 தினங்களுக்கு குடிநீர் பிரச்சனையை ஓரளவு மாவட்ட நிர்வாகம் சமாளித்துவிடும் என கருதப்படுகின்றது.
மேலும், தேர்தல் நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர்கள் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், 24ம் தேதிக்குப் பின்னர் தண்ணீர் வருமா?
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications