கட்சியின் விதியை மீறி பேசினால் மாலையா போட முடியும்? கேசி பழனிச்சாமி நீக்கம் குறித்து ஜெயக்குமார்!
சென்னை: கட்சியின் விதியை மீறி பேசினால் மாலையா போட முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து கேசி பழனிச்சாமி நீக்கப்பட்டது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கே.சி. பழனிசாமியின் நீக்கத்திற்கு பின்னணியில் யாரும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். கட்சியின் அடிப்படை விதியை யார் மீறினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது என்றார்.
கட்சியின் விதியை மீறி பேசினால் மாலையா போட முடியும்? என்று கேள்வி எழுப்பிய அவர், கே.சி. பழனிசாமி விவகாரத்தில் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக் கூடாது என்று கூறினார்.
ராகுலின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழ் மொழியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications