மீனவர், காவிரி பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுப்போம்: சென்னையில் அத்வானி
சென்னை: தமிழக மீனவர் பிரச்சனை, காவிரி நதிநீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இன்று சென்னை வந்த அத்வானி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையானதாக இருக்கிறது. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்ததும் தமிழக மீனவர் பிரச்சனை, காவிரி நதிநீர் பிரச்சனை ஆகியவற்றுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்போம்.
மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசின் தெளிவற்ற வெளியுறவுக் கொள்கைதான் காரணம்
இவ்வாறு அத்வானி கூறினார்.
வேலூரில் கறுப்புக் கொடி காட்ட முயற்சி
சென்னையில் அத்வானி வந்திறங்கிய அதே நேரத்தில் வேலூரில் அத்வானியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடை நோக்கி கறுப்புக் கொடியுடன் சென்ற இந்திய தேசிய லீக் கட்சியினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications