தாமிரபரணியில் ஒரு பிடி மணல் எடுக்கவும் அனுமதிக்க மாட்டோம்... நல்லக்கண்ணு கொந்தளிப்பு
தாமிரபரணி ஆற்றில் இனி எந்த இடத்திலும் சிறுபிடி அளவு மணல் எடுக்கவும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் இனி எந்த இடத்திலும் சிறுபிடி அளவு மணல் எடுக்கவும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட அணையானது முறையான பராமரிப்பின்றி மண் மேடானது. இதையடுத்து அணையை தூர் வாரக் கோரி தாமிரபரணி நதி நீர் பாதுகாப்பு தேசிய பேரவை அமைப்பாளர் நயினார் தலைமையில் பல்வேறு போராட்டம் நடந்தது.

பசுமை தீர்ப்பாயமும் தாமிரபரணியைத் தூர்வார 2015ல் உத்தரவிட்டது. இதைப் பயன்படுத்தி அதிக அளவில் தூர்வாரும் பணி என்ற பெயரில் மணல் கொள்ளை நடந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட அணை பாதுகாப்பு போராட்ட குழுவினர் தூர் வாரத் தடை கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுபாட்டு குழு உறுப்பினர் நல்லக்கண்ணு நேரில் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் தூர் வார பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.
இதுகுறித்து நல்லக்கண்ணு கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் அணை 7 பிரிவாகப் பிரிக்கப்பட்டு தூர்வாரத் திட்டமிடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. தூர் வார வேண்டும் என்ற பெயரில் பல கோடி மதிப்பிலான மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆற்றில் உறைக் கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில் மணல் அள்ளியதால் குடிநீர் பிரச்சனையும் தலை தூக்கியுள்ளது. இதையடுத்து தற்காலிக போர்வெல் அமைத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் சமாளித்து வருகின்றனர். இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட இனி எடுக்க விடமாட்டோம் என்று ஆவேசமாக நல்லக்கண்ணு தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications