காற்று சாதகமாக இருப்பதால் அதிக மழை பெய்யலாம்.. வானிலை மையம்
சென்னை: வங்கக் கடல் பகுதியில் கீழ்திசையிலிருந்து வீசும் காற்று சாதகமாக இருப்பதால் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்கி விட்டது. ஆனால் தற்போது மழை அவ்வளவாக இல்லை. குறிப்பாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழையைக் காணோம்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடந்த சில நாட்களாக ஆந்திராவையொட்டி உள்ள வங்ககடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சியாக காணப்படுகிறது.
இதன் காரணமாகவும், நிலம் சார்ந்த நிகழ்வு காரணமாகவும் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். கீழ்திசை காற்று சாதகமாக இருப்பதால் வரும் நாட்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications