வலுக்கட்டாயமாக வெளியேற்றம்.. அடுத்த நடவடிக்கை என்ன.. சாந்தோமில் மாணவர்கள் ஆலோசனை

தமிழகம் முழுவதிலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலீசார் கலைத்து வருகின்றனர். இனி அடுத்தக்கட்ட போராட்டம் என்ன என்பது குறித்து மாணவர்கள் குழு ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மாணவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து போலீசார் அவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டனர். ஆனால் போராட்டத்தை நிறுத்த மறுத்த போராட்டக்காரர்கள் கடலில் இறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

What next, Agitators discuss in Santhome

ஆனாலும், போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மெரினாவில் இருந்து கலைந்து சென்ற மாணவர்கள் சுமார் 2000 பேர் சாந்தோம் பகுதியில் ஒன்று கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் எடுக்கும் முடிவுகளின் படி, ஒரு குழு பிரிந்து மதுரைக்கு சென்று அங்குள்ள போராட்டக்காரர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+