எம்எல்ஏக்கள் வேறு தொழிலே செய்யக்கூடாதா? திமுக உறுப்பினருக்கு முதல்வர் எடப்பாடியார் கேள்வி
எம்எல்ஏக்கள் வேறு தொழிலே செய்யக்கூடாதா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எம்எல்ஏக்கள் வேறு தொழிலே செய்யக்கூடாதா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டசபையில் பேசிய திமுக எம்எல்ஏ ரங்கநாதன் அரசு டெண்டர் எடுக்கும் பணிகளில் உயர்பதவிகளில் உள்ளவர்களின் உறவினர்கள் ஈடுபட்டுள்ளதாக புகார் கூறினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களின் உறவினர்கள் வேறு தொழிலே செய்யக் கூடாதா? என்றார். சட்டத்திற்குட்பட்டு அரசு டெண்டரை எடுப்பதில் தவறில்லை என திமுக எம்எல்ஏவுக்கு முதல்வர் பதில் அளித்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால் அரசு டெண்டரை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications