வாக்குப்பெட்டியில் எந்த வேட்பாளருக்கு எத்தனையாவது இடம்?
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பெட்டியில் எந்தெந்த வேட்பாளருக்கு எத்தனையாவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியுமா?
சென்னை : பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப்பெட்டியில் எந்தெந்த வேட்பாளருக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா.
இந்த முறையாவது இடைத்தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பணப்பட்டுவாடா புகார், ஜெயலலிதா வீடியோ வெளியீடு என்று எழுந்த பிரச்னைகளால் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது.

எனினும் இந்த தேர்தலுக்காக 5 மடங்கு அதிக செலவு செய்துள்ள தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடித்துவிடும் உறுதியோடு நின்று தேர்தல் நடத்தி வருகிறது. 2.28 லட்சம் வாக்காளர்களின் வாக்குகளை பதிவு செய்வதற்காக 258 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
இவை அனைத்துமே பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப் பெட்டியில் முதல் வேட்பாளராக பகுஜன் சமாஜ் கட்சியின் சத்தியமூர்த்தியும், இரண்டாவதாக பாஜகவின் கரு. நாகராஜனும் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றாவதாக அதிமுகவின் மதுசூதனன், 4வதாக திமுகவின் மருதுகணேஷின் பெயரும் இடம்பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்திற்கு 6வது இடமும், தொப்பி சின்னம் பெற்ற நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் ரமேஷிற்கு 10வது இடமும் தரப்பட்டுள்ளது.
மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஆர்கே நகரில் 3 வாக்குப்பெட்டி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வாக்குப்பெட்டிக்கு 16 வேட்பாளர்கள் வீதம் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது. குக்கர் சின்னத்தில் போட்டியிடும் தினகரனுக்கு 3வது வாக்குப்பெட்டியில் முதல் இடம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications