அப்பல்லோவில் நடராஜன் அட்மிட் ஆனதில் சந்தேகம்.. திமுக எம்.எல்.ஏ சொல்வதை பாருங்கள்
"அப்பல்லோவின் கதைக்கு, யார் இயக்குநர்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார், திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்.சசிகலா கணவர் நடராஜன் அந்த மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்.
3 PM-Sasikala next CM of TN
— J Anbazhagan (@JAnbazhagan) February 6, 2017
7 PM-Natarajan in Apollo
9 PM-Apollo announces PressMeet for today
Who's d Director of today's Apollo story ?
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், "மதியம் (நேற்று) 3 மணிக்கு சசிகலா தமிழக முதல்வர் என்றார்கள். இரவு 7 மணிக்கு, அப்பல்லோவில் நடராஜன் சிகிச்சைக்கு சேர்கிறார். இரவு 9 மணிக்கு, அப்பல்லோ பிரஸ் மீட் செய்ய உள்ளது (இன்று அப்பல்லோ டாக்டர்கள் பிரஸ் மீட் செய்ய உள்ளது பற்றி நேற்று இரவு தகவல் வெளியானது) குறித்த தகவல் வெளியே வருகிறது. அப்பல்லோவின் கதைக்கு, யார் இயக்குநர்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல இன்னும் சில நாட்களில் திமுக ஆட்சி அமைவது உறுதி என்றும் அன்பழகன் நேற்று வெளியிட்ட டிவிட்டில் தெரிவிக்கப்பட்டுறள்ளது.
இன்னும் சில நாட்களில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி 🙏🏻.#DMK
— J Anbazhagan (@JAnbazhagan) February 5, 2017
சசிகலாவின் கணவர் நடராஜன் ரத்த கொதிப்பு காரணமாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.