பரந்து விரிந்த பயிற்சி மையங்கள்.. இனி சங்கர் ஐஏஎஸ் அகாடமியை நடத்தப்போவது யார்?
Recommended Video

சென்னை: இந்தியாவின் முன்னணி ஐஏஎஸ் அகாடமி பயிற்சியாளரான சங்கர், தற்கொலை செய்த நிலையில், அடுத்ததாக அந்த அகாடமியை யார் நடத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2004ம் ஆண்டு, சங்கர் ஐஏஎஸ் அகாடமியை உருவாக்கிய சங்கர் நேற்று இரவு சென்னையிலுள்ள தனது இல்லத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுவரை, 900த்திற்கும் மேற்பட்ட சிவில் சர்வீஸ் பணியாளர்களை உருவாக்கியுள்ளார் சங்கர்.
[சுமார் 1000 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தற்கொலையா? நம்ப முடியவில்லையே]

பல இடங்களில் பயிற்சி மையம்
அண்ணாநகர் சாந்தி காலனியில் 3 தளங்கள் கொண்ட பெரிய அகாடமி ஒன்றை சங்கர் துவங்கினார். ஐஏஎஸ் அகாடமி மட்டுமின்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு பயிற்சி அளிக்க, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் மையங்கள் உள்ளன. இந்த பயிற்சி மையங்களை இனி யார் நடத்தும் பொறுப்பை ஏற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனி ஒருவர்
தனி ஒரு நபராகத்தான், ஐஏஎஸ் அகாடமியை சங்கர் உருவாக்கினார். அவருடைய மனைவி ஐஐடியில் படித்தவர். அங்கு பேக்கல்டியாக பணிபுரிந்து வருகிறார். அவர் சிறந்த கல்வியாளர் என்பதால், ஒருவேளை அகாடமியை மனைவியே நடத்த கூடும் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு சங்கர் தற்கொலை செய்த நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சங்கர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது நல்லடக்கத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து யார் வழிநடத்தல்
இதன்பிறகுதான், சங்கர் அகாடமியை இனி யார் வழிநடத்துவார்கள் என்பது தீர்மானிக்கப்படும். சங்கருக்கு மனைவி மட்டுமின்றி 2 மகள்களும் உள்ளனர். அவர் சகோதரி, ஒடிசாவில், ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். எனவே அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது.

டெல்லி போக வேண்டாம்
ஐஏஎஸ் பயிற்சிக்கு டெல்லிக்குதான் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, சென்னை நோக்கி வர வைத்தது சங்கர் ஐஏஎஸ் அகாடமி. 27 நாடுகளில் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளாக பணியாற்றுவோர், சங்கர் அகாடமியில் படித்தவர்கள். இதுபோன்ற மிக பிரபலமான ஒரு அமைப்பை யார் இனி வழிநடத்துவார்கள் என்ற ஏக்கம் மாணவ சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.
-
இந்த ஒரு ப்ராஜக்ட் போதும்.. சென்னையின் அடையாளமே மாறப்போகிறது.. பணிகள் ஓவர்.. எதிர்பார்க்காத திட்டம் -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications