பரந்து விரிந்த பயிற்சி மையங்கள்.. இனி சங்கர் ஐஏஎஸ் அகாடமியை நடத்தப்போவது யார்?
Recommended Video

சென்னை: இந்தியாவின் முன்னணி ஐஏஎஸ் அகாடமி பயிற்சியாளரான சங்கர், தற்கொலை செய்த நிலையில், அடுத்ததாக அந்த அகாடமியை யார் நடத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2004ம் ஆண்டு, சங்கர் ஐஏஎஸ் அகாடமியை உருவாக்கிய சங்கர் நேற்று இரவு சென்னையிலுள்ள தனது இல்லத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுவரை, 900த்திற்கும் மேற்பட்ட சிவில் சர்வீஸ் பணியாளர்களை உருவாக்கியுள்ளார் சங்கர்.
[சுமார் 1000 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தற்கொலையா? நம்ப முடியவில்லையே]

பல இடங்களில் பயிற்சி மையம்
அண்ணாநகர் சாந்தி காலனியில் 3 தளங்கள் கொண்ட பெரிய அகாடமி ஒன்றை சங்கர் துவங்கினார். ஐஏஎஸ் அகாடமி மட்டுமின்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு பயிற்சி அளிக்க, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் மையங்கள் உள்ளன. இந்த பயிற்சி மையங்களை இனி யார் நடத்தும் பொறுப்பை ஏற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனி ஒருவர்
தனி ஒரு நபராகத்தான், ஐஏஎஸ் அகாடமியை சங்கர் உருவாக்கினார். அவருடைய மனைவி ஐஐடியில் படித்தவர். அங்கு பேக்கல்டியாக பணிபுரிந்து வருகிறார். அவர் சிறந்த கல்வியாளர் என்பதால், ஒருவேளை அகாடமியை மனைவியே நடத்த கூடும் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு சங்கர் தற்கொலை செய்த நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சங்கர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது நல்லடக்கத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து யார் வழிநடத்தல்
இதன்பிறகுதான், சங்கர் அகாடமியை இனி யார் வழிநடத்துவார்கள் என்பது தீர்மானிக்கப்படும். சங்கருக்கு மனைவி மட்டுமின்றி 2 மகள்களும் உள்ளனர். அவர் சகோதரி, ஒடிசாவில், ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். எனவே அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது.

டெல்லி போக வேண்டாம்
ஐஏஎஸ் பயிற்சிக்கு டெல்லிக்குதான் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, சென்னை நோக்கி வர வைத்தது சங்கர் ஐஏஎஸ் அகாடமி. 27 நாடுகளில் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளாக பணியாற்றுவோர், சங்கர் அகாடமியில் படித்தவர்கள். இதுபோன்ற மிக பிரபலமான ஒரு அமைப்பை யார் இனி வழிநடத்துவார்கள் என்ற ஏக்கம் மாணவ சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.
-
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்!











Click it and Unblock the Notifications