சுமார் 1000 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தற்கொலையா? நம்ப முடியவில்லையே
Recommended Video

சென்னை: 900 சிவில் சர்வீஸ் வெற்றியாளர்களை உருவாக்கிய சங்கர் அகாடமி தலைவர் சங்கர் ஏன் தற்கொலை செய்தார் என்பது மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாக உள்ளது.
2004ம் ஆண்டு, சங்கர் ஐஏஎஸ் அகாடமியை உருவாக்கினார். மிகவும் சாதாரண குடும்பத்திலிருந்து மேலே வந்து அகாடமி தொடங்கிய சாதனையாளர்.
900த்திற்கும் மேற்பட்ட சிவில் சர்வீஸ் பணியாளர்களை உருவாக்கியவர் சங்கர். எனவே இவரா இப்படி முடிவெடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
[14 ஆண்டு சேவை.. விவசாய குடும்பத்தில் பிறந்து பல ஐஏஎஸ்களை உருவாக்கியவர்.. சங்கர் தற்கொலை!]

உழைத்து முன்னேறினார்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள, நல்லாகவுண்டம்பாளையம் என்ற சிறு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 30 வயதாக இருக்கும்போது சிவில் சர்வீஸ் தேர்வு எழுத முயன்றுள்ளார். ஆனால் வயது மூப்பை காரணம் காட்டி அவர் சிவில் கல்வி பயில முடியாமல் போனது. இதன்பிறகு 36 மாணவர்களுடன் ஐஏஎஸ் அகாடமியை துவங்கினார். இப்போது 1500 மாணவர்களுக்கும் மேல் அங்கு கல்வி பயில்கிறார்கள். இப்படி உழைத்து முன்னேறியவர் எளிதாக எப்படி மனமுடைந்திருப்பார் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

குடும்ப உறுப்பினர்கள்
குடும்ப பிரச்சினையால் சங்கர் தூக்குப்போட்டு, தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்தபோது, அவரது உடன் இருந்த மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கர் சகோதரி, ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதேபோல தோழர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென் இந்தியா நோக்கி
ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் என்ற பொதுக்கருத்தை மாற்ற சங்கர் ஐஏஎஸ் அகாடமி உதவியது. டெல்லியிலிருந்து, தென் இந்தியா நோக்கி, ஐஏஎஸ் கனவை திரும்பி பார்க்க வைத்தவர் சங்கர். ஆனால், அவரது வாழ்க்கை கனவு கலைந்து போனது என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.

பல அதிகாரிகளை உருவாக்கியவர்
சென்னை அண்ணாநகரில் 2 வருடங்கள் முன்பாக பெரிய அளவில் விரிவுபடுத்தி அகாடமி துவக்கினார். மதுரை, திருச்சி, சேலம் ஆகியவற்றில் டிஎன்பிசி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கவும் கல்வி கூடங்களை நடத்தி வந்தார் சங்கர். பெங்களூர் உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களிலும் கிளைகள் உள்ளன. பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கியவர் சங்கர் என்பதால் அதிகாரிகள் பலரும் சங்கர் இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளனர்.
-
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
தூத்துக்குடி, சேலம் ஆட்சியர்கள் மாற்றம்.. மதுரை காவல் ஆணையர் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications