கமல் டிவிட்டர் பக்கம் வராமல் எஸ்கேப்பாக காரணம் தெரிந்து விட்டது!
சென்னை: அவ்வப்போது டிவிட்டுகளை வெளியிட்டு வந்த நடிகர் கமல்ஹாசன், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு கூட கருத்து சொல்லாமல் எஸ்கேப்பாகிவிட்டார். அவர் என்னதான் செய்கிறார் என நெட்டிசன்கள் தலையை பிய்த்துக்கொண்டுள்ளனர்.
இப்போது ரஜினி களமிறங்கி ஆடுவதால், சச்சினை அடிக்கவிட்டு மறுமுனையில் நிற்கும் கங்குலியை போல சும்மா இருக்கிறார் கமல் என சில நெட்டிசன்கள் சொல்கிறார்கள். சிலரோ, தினகரனுக்கு மக்கள் கொடுத்த வெற்றியை ஜீரணிக்க முடியாமல்தான் எஸ்கேப் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். சிலரோ கமல் படங்களில் பிசியாக உள்ளார் என்கிறார்கள்.
ஆனால் இந்த நெட்டிசன் சொல்லியுள்ளதை பாருங்கள். அதகளம்.
கமலுக்கு நெட் பேக் முடுஞ்சிடுச்சு போல டுவிட்டர் பக்கம் ஆளயே காணாம்..
— ஆஹான்!! 😉 (@Kadharb32402180) December 29, 2017
"கமலுக்கு நெட் பேக் முடுஞ்சிடுச்சு போல டுவிட்டர் பக்கம் ஆளயே காணாம்.." என்கிறார் இவர். யோசித்து பாருங்க கண்டிப்பாக உதட்டில் புன்னகை எட்டிப் பார்க்கும். பின்ன என்ன, ஆன்னா ஊன்னா டிவிட்டரே கதின்னு கிடந்த மனுஷன் இப்படி திடீரென மாயமானா இப்படியெல்லாம்தான் பேசுவாங்க.