சிறுவாணி தடை: தமிழகத்தின் முதுகில் குத்திய துரோகங்களுக்கு தாஜா செய்கிறதாம் மத்திய அரசு! #siruvani
காவிரி பிரச்சனையில் முதுகில் குத்தியதால் மத்திய அரசு மீது தமிழகம் கோபத்தில் இருக்கிறது. இதை தணிக்கும் வகையில் தற்போது சிறுவாணியில் கேரளா அணை கட்ட தடை விதித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: சிறுவாணியின் குறுக்கே கேரளா அணை கட்ட தடை விதித்துள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு திடீரென கடிதம் அனுப்பியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பிரச்சனைகளில் முதுகில் குத்திய துரோகங்களால் கொந்தளிப்பில் இருக்கும் தமிழர்களை சமாதானப்படுத்தும் மத்திய பாஜக அரசின் ஒரு சிறுமுயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நிராகரித்தது மத்திய அரசு. ஏனெனில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக் கொண்டால் கர்நாடகாவில் அதன் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது மட்டுமே நிதர்சனம்.
ஆனால் தமிழகத்திலும் கேரளாவிலும் ஒருபோதும் பாஜகவால் ஆட்சி அமைத்துவிட முடியாது. இதனால்தான் காவிரி, ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்சனை, மீத்தேன், மேகதாது அணை, கெயில் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் தமிழகத்தின் குரலை கேட்கக் கூடாது என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது மத்திய அரசு.

திடீர் தடை
தமிழகத்துக்கு துரோகம் செய்தாக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளாவுக்கு அணை கட்ட முதலில் அனுமதி கொடுத்தது மத்திய பாஜக அரசு. இப்போது அதற்கு தடை விதித்துவிட்டதாக கூறுகிறது. அதுவும் இந்த தடை கூட காவிரி தொடர்பாக தமிழக அரசின் வழக்கு முடியும்வரைதானாம்.

தமிழகத்தில் கிளர்ச்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமுமே கிளர்ந்தெழுந்து போராடியது. தமிழகத்தின் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2 நாட்கள் ரயில் சேவையை முடக்கி பல லட்சம் கைதாகினர். மத்திய அரசின் துரோகங்களால் இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் என்று வைகோ உள்ளிட்ட தலைவர்கள் எச்சரிக்கையும்விடுத்திருந்தனர்.

பிடிவாதம்
தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பை தமிழக பாஜக நன்கு உணர்ந்ததாலேயே டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரினர். ஆனாலும் பாஜகவும் மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என பிடிவாதமாக இருந்து வருகிறது.

கோபத்தை தணிக்க...
தற்போது தமிழகத்தின் கோபத்தை தணிக்க திடீரென சிறுவாணியில் அணை கட்ட கேரளாவுக்கு தடை விதித்துவிட்டதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியிருக்கிறது. அதே நேரத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்ட கடப்பாரையுடன் கிளம்பியுள்ள கர்நாடகாவுக்கு இதே தடையை விதிக்க மத்திய பாஜக அரசுக்கு திராணி இருக்கிறதா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications