சிறுவாணி தடை: தமிழகத்தின் முதுகில் குத்திய துரோகங்களுக்கு தாஜா செய்கிறதாம் மத்திய அரசு! #siruvani
காவிரி பிரச்சனையில் முதுகில் குத்தியதால் மத்திய அரசு மீது தமிழகம் கோபத்தில் இருக்கிறது. இதை தணிக்கும் வகையில் தற்போது சிறுவாணியில் கேரளா அணை கட்ட தடை விதித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: சிறுவாணியின் குறுக்கே கேரளா அணை கட்ட தடை விதித்துள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு திடீரென கடிதம் அனுப்பியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பிரச்சனைகளில் முதுகில் குத்திய துரோகங்களால் கொந்தளிப்பில் இருக்கும் தமிழர்களை சமாதானப்படுத்தும் மத்திய பாஜக அரசின் ஒரு சிறுமுயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நிராகரித்தது மத்திய அரசு. ஏனெனில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக் கொண்டால் கர்நாடகாவில் அதன் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது மட்டுமே நிதர்சனம்.
ஆனால் தமிழகத்திலும் கேரளாவிலும் ஒருபோதும் பாஜகவால் ஆட்சி அமைத்துவிட முடியாது. இதனால்தான் காவிரி, ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்சனை, மீத்தேன், மேகதாது அணை, கெயில் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் தமிழகத்தின் குரலை கேட்கக் கூடாது என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது மத்திய அரசு.

திடீர் தடை
தமிழகத்துக்கு துரோகம் செய்தாக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளாவுக்கு அணை கட்ட முதலில் அனுமதி கொடுத்தது மத்திய பாஜக அரசு. இப்போது அதற்கு தடை விதித்துவிட்டதாக கூறுகிறது. அதுவும் இந்த தடை கூட காவிரி தொடர்பாக தமிழக அரசின் வழக்கு முடியும்வரைதானாம்.

தமிழகத்தில் கிளர்ச்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமுமே கிளர்ந்தெழுந்து போராடியது. தமிழகத்தின் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2 நாட்கள் ரயில் சேவையை முடக்கி பல லட்சம் கைதாகினர். மத்திய அரசின் துரோகங்களால் இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் என்று வைகோ உள்ளிட்ட தலைவர்கள் எச்சரிக்கையும்விடுத்திருந்தனர்.

பிடிவாதம்
தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பை தமிழக பாஜக நன்கு உணர்ந்ததாலேயே டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரினர். ஆனாலும் பாஜகவும் மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என பிடிவாதமாக இருந்து வருகிறது.

கோபத்தை தணிக்க...
தற்போது தமிழகத்தின் கோபத்தை தணிக்க திடீரென சிறுவாணியில் அணை கட்ட கேரளாவுக்கு தடை விதித்துவிட்டதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியிருக்கிறது. அதே நேரத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்ட கடப்பாரையுடன் கிளம்பியுள்ள கர்நாடகாவுக்கு இதே தடையை விதிக்க மத்திய பாஜக அரசுக்கு திராணி இருக்கிறதா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications