முடித்துவைக்கப்பட்ட காவிரி பிரச்சனையை கிளறிவிடும் கமல்!
காவிரி பிரச்சனையை கமல்ஹாசன் மீண்டும் எழுப்பியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video

சென்னை: உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு மத்திய அரசும் மேலாண்மை ஆணையத்தை அமைத்த பின்னரும் காவிரி பிரச்சனையை பேசி தீர்ப்போம் என கமல் உளறி கொட்டியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சனைக்காக எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் பயன்கிடைக்காத நிலையில்தான் நடுவர் மன்றமே அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு, இறுதித் தீர்ப்பையும் கூட கர்நாடகா மதித்ததே இல்லை.

இந்த விவகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிட்டு பிறப்பித்த உத்தரவுகளையும் கூட உதாசீனம் செய்கிறது கர்நாடகா. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான அப்பீல் வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட எதனையுமே ஏற்க மறுத்து வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் கூட அல்ல ஒரு ஆணையத்தை மத்திய அரசு ஒருவழியாக அமைத்து கெஜட்டில் வெளியிட்டு விட்டது. இந்த ஆணையத்தையும் ஏற்க முடியாது என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது கர்நாடகா.
கர்நாடகாவின் வம்படியான போக்கால் 400-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் மாண்டு போயினர். காவிரியில் நமக்கான உரிமையை கர்நாடகா கபளீகரம் செய்யப் பார்க்கிறது. மேலாண்மை ஆணையமாவது காவிரி நீரை பெற்றுத்தருமா? என காத்திருக்கிறது தமிழகம்.
இந்த அடிப்படை விஷயங்களை உணராமல் அல்லது தெரியாமல் காவிரி பிரச்சனைக்கு பேச்ச்வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என உளறிக் கொட்டியிருக்கிறார் கமல். கர்நாடகா முதல்வரும் தமிழக அரசும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தால் நாங்களும் தயார் என கூறியிருக்கிறார்.
மறுபடியும் முதலில் இருந்தா? என தமிழகத்தை சலிப்படைய வைத்திருக்கிறது கமலின் இந்த முயற்சி. கமல்ஹாசன் என்ன தமிழகத்து பிரதிநிதியா? புதிய அரசியல் கட்சி தொடங்கி விளம்பரம் தேவைப்பட்டால் சீக்கிரமே பிக்பாஸை ஒளிபரப்புங்க என்று விஜய் டிவியிடம் மல்லுக்கட்டலாமே தவிர விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் நடந்து கொள்வது தப்பு! கண்டனத்துக்குரியது!












Click it and Unblock the Notifications