காவிரி: 'தற்கொலை பேச்சு'... சசிகலாவின் 'ஸ்லீப்பர் செல்'லாக பேசினாரா நவநீதகிருஷ்ணன் எம்.பி?
தமிழக அரசுக்கு நெருக்கடி தரத்தான் சசிகலா குடும்பத்தின் ஸ்லீப்பர் செல்லாக தற்கொலை குறித்து நவநீதகிருஷ்ணன் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் என ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசியதே தமிழக அரசுக்கு நெருக்கடி தரத்தான் என கூறப்படுகிறது.
ராஜ்யசபாவில் நேற்று பேசிய நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை வலுக்கிறது. நாங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதை விட தற்கொலை செய்து கொள்வோம் என பேசியது பெரும் பரபரப்பானது. இது தொடர்பாக நியூஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் பங்கேற்றார்.

அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் நவநீதகிருஷ்ணன் பேசியிருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நடத்தும் செங்கமலத் தாயார் அறக்கட்டளையில் தற்போதும் நவநீதகிருஷ்ணன் எம்.பி. உறுப்பினராகவே இருக்கிறார் என குறிப்பிட்டார்.
அப்படியானால் தமிழக அரசுக்கு நெருக்கடி தர வேண்டும்; முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடி தர வேண்டும் என சசிகலா குடும்பத்தின் ஸ்லீப்பர் செல்லாகத்தான் நவநீதகிருஷ்ணன் பேசினாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications