கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்ததால் தமிழக மீனவரை படுகொலை செய்து சிங்கள கடற்படை நரவேட்டை!
கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்ததால் தமிழக மீனவரைப் படுகொலை செய்து சிங்கள கடற்படை நரவேட்டையாடியுள்ளது.
சென்னை: கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பதாக அறிவித்ததால் தமிழக மீனவரை படுகொலை செய்து சிங்கள கடற்படை வெறியாட்டம் போட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள கடற்படையால் இதுவரை 800 தமிழக மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர் படுகொலைக்கு எந்த ஒரு நீதியும் எந்த ஒரு அரசாலும் வழங்கப்பட்டதில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள திராணியற்று நிராயுதபாணிகளான தமிழக மீனவர்களை படுகொலை செய்து வெறித்தனம் காட்டியது சிங்கள கடற்படை. இந்த ரத்தவெறி 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னரும் நீடித்தது.

2011-ல் 4 மீனவர் படுகொலை
2011-ம் ஆண்டு 4 மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்து உச்ச கோழைத்தனத்தை உலகுக்கு காட்டியது சிங்களம். அதன்பின்னர் அதன்படுகொலை வெறியாட்டம் சற்றே தணிந்திருந்தது.

கிள்ளிப் போடாத மத்திய அரசு
இந்த நிலையில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம்; மீனவர் பிரச்சனையை தீர்ப்போம் என்ற வாய்ச்சவடாலுடன் மத்தியில் பாஜக அரசு அமைத்தது. இதோ 3 ஆண்டுகள் முடிவடைந்து போனது. எந்த ஒரு துரும்பையுமே இந்திய மத்திய அரசு கிள்ளிப் போடவில்லை.

கச்சத்தீவு விழா புறக்கணிப்பு
இதனால் கொந்தளித்துப் போன ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை வசம் உள்ள 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளையும் மீனவர்களையும் விடுதலை செய்யும் வரை கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க போவதில்லை என அறிவித்தனர். அதுவும் அந்தோணியார் கோவில் திருவிழா அடுத்த ஒரு சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

சிங்கள நரவேட்டை
இந்த அறிவிப்பு வெளியானதுதான் தாமதம்... இந்திய கடல் எல்லையான ஆதாம்பாலத்துக்குள் நுழைந்து அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கியால் சுட்டது. இதில் 22 வயது பிரிட்சோ என்ற அப்பாவி மீனவ இளைஞர் உயிர் பறிபோனது. மீண்டும் தொடங்கிவிட்ட சிங்கள பேரினவாத அரசின் நரவேட்டை தமிழகத்தை கடும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications