திருமாவின் சட்டை மட்டும் கலர் மாறியது ஏன் தெரியுமா?
சென்னை : நாலு பேருல ஒருத்தர் மட்டும் கலர் மாற்றி சட்டை போட்டா கேள்வி வரத்தானே செய்யும். அப்படித்தான். மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகிய நான்கு பேரில் மூன்று பேர் ஆரஞ்ச் நிறத்தில் டி சர்ட் போட்டிருக்க, திருமாவளவன் மட்டும் பச்சை நிறத்தில் டி சர்ட் போட சமூக வலைத்தளத்தில் அதை வைத்து பிரச்சினையை கிளப்பினார்கள்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆரஞ்ச் டி.சர்ட் அளவு போதவில்லை அதனால் வேறு டிசர்ட் போடவேண்டியதாகி விட்டது என்று பதிவிட்டுள்ளார்.

கொஞ்சம் வாக்கிங்
மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம் செல்லும் ஊர்களில் உற்சாகமாகவே வலம் வருகின்றனர். காலை நேரத்தில் காலார நடந்து கொடுக்க தவறுவதில்லை.

சேலத்தில் நால்வர்
கடந்த 2ம் தேதி மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் கிருஷ்ணகிரியில் காலை நடைப் பயிற்சி மேற்கொண்டபோது,விசிக தலைவர் திருமாவளவன் பச்சை கலர் டிசர்ட் அணிந்து சென்றது சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

கலர் மாறியது
வைகோ,ஜி.ராமகிருஷ்ணன்,முத்தரசன் ஆகியோர் ஆரஞ்சு,வெள்ளை,மஞ்சள் நிறங்கள் கலந்த டி-அணிந்து காலைநேர நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.ஆனால் திருமாவளவன் மட்டும் மற்ற மூவர்களுக்கு மாற்றாக கிளிப் பச்சை நிறத்தில் டிசர்ட் அணிந்து அவர்களுடன் நடைப் பயிற்சி சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன.

வைரல் ஹிட்
ஏற்கெனவே திருமாவளவன் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகிவிடுவார் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,இந்த பச்சை கலர் டி- சர்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் பலவித கருத்துக்களை பதிவிட்டனர்.

ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம்
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,
' 3 வது கட்ட சுற்றுப்பயணத்தில் உள்ளோம். நடைப்பயிற்சி சென்ற புகைப்படத்தில் தோழர் திருமாவளவன் பனியன், தோழர் முத்தரசன் வேட்டி அணிந்தது பற்றி சில விமர்சனங்கள் வந்திருந்தன.

இதையெல்லாமா கேட்பீங்க?
நான்கு பேருக்கும் தோழர்கள் ஒரே வண்ண பனியன் கொடுத்தார்கள். மகிழ்ச்சியோடு அணிந்தோம். தோழர் திருமாவுக்கு பனியன் சற்று இருகப் பிடித்திருந்தது. அதனால், கையில் இருந்த மற்றொரு பனியனை அணிந்துகொண்டார். விமர்சிக்க எதுவுமில்லாத நிலையில் - எதையெல்லாம் விமர்சிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது." என்று பதிவிட்டு விளக்கம் அளித்து இருந்தார்.

திருட்டு மின்சாரம்
இதோடு பிரச்சாரத்திற்கு திருட்டு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது பற்றி கருத்து கூறியுள்ள ஜி.ராமகிருஷ்ணன், இனி இதுபோல நடைபெறாமல் கவனமாக இருப்போம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications