நடந்தையில் சந்தேகம்... மனைவி, குழந்தைகள் உட்பட 5 பேரை வெட்டிய அம்பை இளைஞர் கைது
நெல்லை: அம்பையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தைகள் உட்பட 5 பேரை வெட்டிய இளைஞர் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை அருகே அம்பை பிரம்மதேசம் பாலகன் கோயிலை தெருவை சேர்ந்தவர் பிரம்மகுட்டி. . கூலி தொழிலாளியான இவரது மனைவி ராஜம். இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு இஸ்யா, நாதஸ்வரி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பிரம்மகுட்டி அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் நடந்தையிலும் சந்தேகம் பட்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அவரை சமாதானப்படுத்தி கூட்டி வர சென்ற பிரம்மக்குட்டியின் முயற்சி பலிக்கவில்லை. இதனால் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார் பிரம்மக்குட்டி.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பிரம்மகுட்டி மீண்டும் மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கதவை திறந்த ராஜத்தை மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவர் வெட்டியுள்ளார். பின்னர் வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த மாமனார் சந்திரசேகர், மாமியார் முத்துலெட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளையும் சராமரியாக வெட்டியுள்ளார்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த முன்னாள் நகராட்சி சேர்மன் ராதாகிருஷ்ணன் அங்கு வரவே அவரை பார்த்த பிரம்மகுட்டி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அம்பை டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு படை ஏட்டு எட்வின் உள்ளி்ட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிய 5 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரம்மகுட்டியைப் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications