நடந்தையில் சந்தேகம்... மனைவி, குழந்தைகள் உட்பட 5 பேரை வெட்டிய அம்பை இளைஞர் கைது
நெல்லை: அம்பையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தைகள் உட்பட 5 பேரை வெட்டிய இளைஞர் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை அருகே அம்பை பிரம்மதேசம் பாலகன் கோயிலை தெருவை சேர்ந்தவர் பிரம்மகுட்டி. . கூலி தொழிலாளியான இவரது மனைவி ராஜம். இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு இஸ்யா, நாதஸ்வரி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பிரம்மகுட்டி அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் நடந்தையிலும் சந்தேகம் பட்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அவரை சமாதானப்படுத்தி கூட்டி வர சென்ற பிரம்மக்குட்டியின் முயற்சி பலிக்கவில்லை. இதனால் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார் பிரம்மக்குட்டி.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பிரம்மகுட்டி மீண்டும் மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கதவை திறந்த ராஜத்தை மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவர் வெட்டியுள்ளார். பின்னர் வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த மாமனார் சந்திரசேகர், மாமியார் முத்துலெட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளையும் சராமரியாக வெட்டியுள்ளார்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த முன்னாள் நகராட்சி சேர்மன் ராதாகிருஷ்ணன் அங்கு வரவே அவரை பார்த்த பிரம்மகுட்டி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அம்பை டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு படை ஏட்டு எட்வின் உள்ளி்ட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிய 5 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரம்மகுட்டியைப் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications