கள்ளக் காதல் விவகாரத்தில் சென்னை தொழிலதிபர் படுகொலை- அரிவாளால் கழுத்தை அறுத்த மனைவி கைது!
சென்னை: சென்னை பிராட்வேயில் தொழிலதிபர் அக்பர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அவரது மனைவி பாத்திமாமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த இரும்பு வியாபாரி அக்பர் (வயது 54). அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் நேற்று படுக்கையறையில் பிணமாக கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

காட்டிக் கொடுத்த மோப்பநாய்
அப்போது அழைத்துவரப்பட்ட மோப்ப நாய் சோனா வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது. இதனால் கொலையாளிகள் அதே தெருவில்தான் இருக்க வேண்டும் என போலீசார் முடிவு செய்தனர்.

முன்னுக்குப் பின் முரண்
இக் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அக்பர் மனைவி பாத்திமாமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்காதல் விவகாரம்
அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமாமுத்து ஒப்புக்கொண்டார். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

கைவிட மறுப்பு
சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமாமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். ஆனால் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமாமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

திருமணம் செய்வேன் என மிரட்டல்
அப்போது அக்பர், பாத்திமாமுத்துவை அடித்ததுடன் கள்ளக்காதலியை திருமணம் செய்வேன் என மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி பாத்திமாமுத்து, அக்பர் தூங்கியவுடன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்தார்.

நாடகம்
அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார். காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாத்திமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications