கள்ளக் காதல் விவகாரத்தில் சென்னை தொழிலதிபர் படுகொலை- அரிவாளால் கழுத்தை அறுத்த மனைவி கைது!
சென்னை: சென்னை பிராட்வேயில் தொழிலதிபர் அக்பர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அவரது மனைவி பாத்திமாமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த இரும்பு வியாபாரி அக்பர் (வயது 54). அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் நேற்று படுக்கையறையில் பிணமாக கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

காட்டிக் கொடுத்த மோப்பநாய்
அப்போது அழைத்துவரப்பட்ட மோப்ப நாய் சோனா வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது. இதனால் கொலையாளிகள் அதே தெருவில்தான் இருக்க வேண்டும் என போலீசார் முடிவு செய்தனர்.

முன்னுக்குப் பின் முரண்
இக் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அக்பர் மனைவி பாத்திமாமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்காதல் விவகாரம்
அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமாமுத்து ஒப்புக்கொண்டார். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

கைவிட மறுப்பு
சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமாமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். ஆனால் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமாமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

திருமணம் செய்வேன் என மிரட்டல்
அப்போது அக்பர், பாத்திமாமுத்துவை அடித்ததுடன் கள்ளக்காதலியை திருமணம் செய்வேன் என மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி பாத்திமாமுத்து, அக்பர் தூங்கியவுடன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்தார்.

நாடகம்
அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார். காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாத்திமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications