உசிலம்பட்டியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் தப்பியோட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
உசிலம்பட்டியை அடுத்த கோடாங்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி. இவரது மனைவி நல்லம்மாளுடன் தன்னுடைய தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த சின்னச்சாமி, அரிவாளால் நல்லம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்
வீட்டு தோட்டத்திற்கு வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்ச சென்ற அவரது மகள் ஜெயா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நல்லம்மாள் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து, ஏழுமலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலையாளி சின்னச்சாமியைத் தீவிரமாக தேடி வருகின்றனர்












Click it and Unblock the Notifications