வெறி பிடித்து அலையும் செந்நாய்,.. கடிட்டு இறந்த கடமான்.. நெல்லையில் மக்கள் பீதி!
நெல்லை: நெல்லை அருகே செந்நாய் அட்டகாசம் தலை தூக்கியுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை சீக்கிரமே பூட்டிக் கொண்டு படுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு புலி, சிறுத்தை, கரடி, யானை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவை இரவு நேரங்களில் மலை அடிவாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் புகுந்து விடுகின்றன.

இந்நிலையில் களக்காடு வனச்சரகத்திற்கு உள்பட்ட சேரன்மகாதேவி அருகேயுள்ள பட்டங்காடு ஊருக்கு தென்பகுதியில் ரத்த காயத்துடன் கடமான் ஓன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. களக்காடு புலிகள் காப்பாக துணை இயக்குனர் முருகானந்தம் உத்தரவின்படி வனவர் சிவக்குமார், வனக்காப்பாளர் ராமன், செல்வராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்த கடமானுக்கு இரண்டு வயது இருக்கும். அது பெண் கடமான் என்று கூறப்படுகிறது. இரவு ஊருக்குள் புகுந்த கடமானை செந்நாய் விரட்டி கடித்து குதறியதால் இறநததாக தெரிய வந்தது. இந்த மான் கால்நடை டாக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு களக்காடு முதலிருப்பான வனப்பகுதியில் மற்ற விலங்குகளுக்கு இறையாக கடமான் வீசப்பட்டது. இரவில் செந்நாய் கடித்தது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications