வானொலியில் தமிழ் செய்திகளை நிறுத்தும் முடிவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்- வீரமணி எச்சரிக்கை!
சென்னை: வானொலி நிலையங்களிலிருந்து தமிழ் செய்தி ஒலிபரப்புவதை நிறுத்தும் முடிவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இல்லையேல் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

வீண்வம்பை விலைக்கு வாங்குவது என்பதில் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மத்தியில் உள்ள பாஜக ஆட்சி தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேசன் என்பதில் உள்ள நெய்வேலி என்ற பெயரை நீக்கி, என்.எல்.சி இந்தியா லிமிடெட் என்று பெயர் சூட்டியது பற்றிய எதிர்ப்பு அலை ஓயாத நிலையில், டில்லி, திருச்சி வானொலி நிலையங்களிலிருந்து ஒலிபரப்பப்படும் தமிழ்ச் செய்திகளை நிறுத்திட மத்திய பிஜேபி அரசு முடிவு செய்துள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. செம்மொழி தமிழுக்கு இக்கதியா?
ஹிந்தியையும், செத்த மொழியான சமஸ்கிருதத்தையும் ஒரு பக்கத்தில் வேகவேகமாக பாஜக பரப்பி வருகிறது. அதேவேளையில், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுள் ஒன்றும், உலகின் பல நாடுகளில் பேசப்படும் செம்மொழி தகுதி உள்ளதுமான தமிழ் செய்தி ஒலிபரப்பை டில்லி, திருச்சி வானொலி நிலையங்களிலிருந்து நிறுத்துவது என்ற மத்திய அரசின் முடிவு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பையும், போராட்ட உணர்வையும் கடுமையாக தூண்டும் என்று எச்சரிக்கின்றோம். இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகின்றோம்.
இல்லேயேல் நாடு தழுவிய அறப்போராட்டம் வானொலி நிலையங்கள் முன். விரைவில் அறிவிக்கப்படுவது உறுதி!உறுதி!!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications