சசிகலாவை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க போகிறேன்.. தனியரசு தடாலடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவில் பிளவுபட்டுள்ள அணிகளை இணைக்க முயற்சி எடுத்து வருவதாகவும், இதுதொடர்பாக சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாகவும், அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏவான தனியரசு தெரிவித்தார்.
சசிகலா பரோலில் வெளியே வந்துள்ள நிலையில் தனியரசு இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரான தனியரசு, கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றவராகும்.

சசிகலா பரோலில் வெளியே வந்துள்ள காலகட்டத்தில் தி.நகரிலுள்ள இளவரசி மகள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும், நடராஜன் தங்கியுள்ள மருத்துவமனையை தவிர வேறு எங்கும் சசிகலா செல்லக் கூடாது என்றும், வேறு யாருடனும் சந்திப்பு நிகழ்த்தக்கூடாது, மீடியாக்களிடம் பேசக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications