நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம்.. ஹைகோர்ட்டில் போலீஸ் உத்தரவாதம்!
நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதிலளித்துள்ளது.
சென்னை: நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி குறித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நக்கீரன் கட்டுரைகளில் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆளுநர் மாளிகை அதிகாரி அளித்த புகாரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நக்கீரன் வார இதழ் இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்ட 35 ஊழியர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் ஆளுநர் அளித்த புகாரின் பேரில் தாங்கள் கைது செய்யப்படக்கூடும் என கருதுவதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி அவதூறு வழக்கு பதிவு செய்யாமல் ஆளுநரின் பணிக்கு இடையூறு என வழக்கு பதிவு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.
ஆளுநரின் துணை செயலளார் அளித்த புகாரில் எப்படி சட்டப்பிரிவு 124ன் கீழ் வழக்குப்பதிவு செய்யமுடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆளுநரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தினால்தானே 124ன் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்?
இதற்கு ஐபிசி 499, 500 பிரிவின் கீழ்தானே வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து நக்கீரன் நிறுவன ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என உயர்நீதிமன்றத்தில் ஜாம்பஜார் ஆய்வாளர் உத்தரவாதம் அளித்தார்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications