நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம்.. ஹைகோர்ட்டில் போலீஸ் உத்தரவாதம்!
நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதிலளித்துள்ளது.
சென்னை: நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி குறித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நக்கீரன் கட்டுரைகளில் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆளுநர் மாளிகை அதிகாரி அளித்த புகாரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நக்கீரன் வார இதழ் இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்ட 35 ஊழியர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் ஆளுநர் அளித்த புகாரின் பேரில் தாங்கள் கைது செய்யப்படக்கூடும் என கருதுவதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி அவதூறு வழக்கு பதிவு செய்யாமல் ஆளுநரின் பணிக்கு இடையூறு என வழக்கு பதிவு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.
ஆளுநரின் துணை செயலளார் அளித்த புகாரில் எப்படி சட்டப்பிரிவு 124ன் கீழ் வழக்குப்பதிவு செய்யமுடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆளுநரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தினால்தானே 124ன் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்?
இதற்கு ஐபிசி 499, 500 பிரிவின் கீழ்தானே வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து நக்கீரன் நிறுவன ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என உயர்நீதிமன்றத்தில் ஜாம்பஜார் ஆய்வாளர் உத்தரவாதம் அளித்தார்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications