'பத்மவிபூஷன்' ரஜினிக்கு தேசிய விருது?
ஒரு முறை ஒரு மேடையில் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் ரஜினியிடம் ஒரு கேள்வி கேட்டார்.
இன்னும் தேசிய விருது கிடைக்கலியேங்கிற குறை இருக்கா உன் மனசுல
இருக்கு... தேசிய விருது இன்னும் கிடைக்கலங்கற ஏக்கம் இருக்கு. வரும் காலத்தில் அதற்கான முயற்சி செய்வேன்... என்றார் ரஜினி.
இந்த முறை ரஜினி மனதிலுள்ள அந்தக் குறை தீர்ந்துவிடும் என்கிறார்கள் திரையுலகினர் மற்றும் தேசிய விருதுக் குழுவிலுள்ள சிலர்.
காரணம் கபாலி.
கபாலியில் ரஜினியின் இயல்பான, அழுத்தமான, ஸ்டைலான நடிப்பு அத்தனைப் பேருக்கும் பிடித்துப் போனது. தமிழ் தெரியாத வட இந்தியர்களும் கபாலியை அப்படி ரசித்தார்கள். வட இந்தியாவைப் பொறுத்தவரை, இத்தனை வருட சினிமா வரலாற்றில் கிட்டத்தட்ட ரூ 50 கோடியை வசூலித்த ஒரே தென்னிந்தியப் படம் கபாலிதான்.
இந்த முறை தேசிய விருது பரிந்துரைக்கு கபாலியை அனுப்பும் வேலையில் மும்முரமாக உள்ளனர் கபாலி குழுவினர்.
41 ஆண்டுகளாக கமர்ஷியல் சினிமாவின் ராஜாதிராஜாவாகக் கோலோச்சி வரும் ரஜினியின், தேசிய விருது ஏக்கம் இந்த ஆண்டு நிறைவேறிவிடும் என்கிறார்கள். அந்த நல்ல சேதிக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.