நீதியை நிலைநாட்டிய நீதிபதி அலமேலு நடராஜன்... சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்!
சங்கர் ஆணவப் படுகொலையில் தீர்ப்பு அளித்த நீதிபதி அலமேலு நடராஜனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Recommended Video

சென்னை : உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் கொலைக்கு காரணமான சின்னசாமிக்கு தூக்கு தண்டனையும், கூலிப்படையை சேர்ந்த 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ள நீதிபதி அலமேலு நடராஜனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தையே உலுக்கிப் போட்ட ஆணவக்கொலை வழக்கான உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி காலை முதலே பரபரப்பான சூழல் நிலவியது. திருப்பூர் வன்கொடுமைகள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜனின் தீர்ப்புக்காக ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்து காத்திருந்தது.
சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆணவக்கொலை செய்ய நினைக்கும் பெற்றோருக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி இலமேலு நடராஜன். முதல் குற்றவாளி சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த ஜெயதீசன், 5வதுகுற்றவாளியான மணிகண்டன், 6வது குற்றவாளியான செல்வகுமார், 7வது குற்றவாளியான கலை தமிழ்வாணன், 8வது குற்றவாளியான மதன் உள்ளிட்டோருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

பிறர் உயிரை எடுத்தால் உன் உயிரை நீதி எடுக்கும்
மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வழக்கை முறையாக விசாரித்து சரியான தீர்ப்பளித்துள்ள நீதிபதி அலமேலு நடராஜனுக்கு முகநூல் பக்கத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிறர் உயிரை நீ எடுத்தால் ....உன்னுயிரை நீதி எடுக்கும் என்ற பயத்தை நீதிமன்றங்கள் நேர்மையோடு சொல்லும்போதுதான் என் தேசம் உயிர்வலி உணரும் என்று இவர் உணர்ச்சி பொங்க கருத்து டுவீட்டியுள்ளார்.

நம்பிக்கையளிக்கும் தீர்ப்பு
சிலநேரங்களில் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வருகிறது.. மிக்க நன்றி நீதிபதி அலமேலு நடராஜன் அவர்களே ஆணவ கொலைகளை தடுக்க அரசு முயற்சிக்கப்பட வேண்டும் . வாய்மையே_வெல்லும் என்று இந்த வலைபதிவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஆணவத்துக்கு கிடைத்த பரிசு
கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 ஆறு பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி அலமேலு நடராஜன்.. மரண தண்டனை சரி தப்பு என்பதையெல்லாம் தாண்டி இது சாதியை தூக்கி பிடிப்பவர்களுக்கு ஒரு பாடம்.. அவங்க ஆணவத்துக்கு கிடைத்த பரிசு.. ஆணவப் படுகொலைகள் இனியாவது குறையட்டும். தீண்டாமை_ஒழியட்டும் என்று பதிவிட்டுள்ளார் இவர்.

முக்கிய தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி அலமேலு
திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் தீர்ப்பு கூறிய மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர் இது போன்று கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாக இருந்த நீதிபதி அசோகனும் பல வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார் இந்த வலைபதிவர்.

நீதிபதிக்கு பாராட்டு
நீதிபதி அலமேலு நடராஜன் அவர்களுக்கு நன்றி. தூக்கு தண்டனை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் கூட இது போன்ற சம்பவத்திற்கு தகுந்த தீர்ப்பு தான் என்று இந்த முகநூல் பதிவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications