அதிமுக ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆள முடியாது.. அடித்து சொல்லும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
அதிமுக ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆள முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுக ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆள முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

மத்தியில் ஆள நினைப்பவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் கதவை தட்ட வேண்டிய நிலை ஏற்படும்.
எதிர்கட்சிகளை கூட நாங்கள் வரம்புமீறி பேசுவது இல்லை. எங்கள் நாக்கை வெட்டாமல் இருந்தால் சரி.
அழகிரி தனித்து போட்டியிட்டால் அதிமுகவுக்கு பின்விளைவு இல்லை, முன்விளைவுதான். இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications