கஷ்டப்பட்டு படிக்க வைத்த கணவர்.. போன இடத்தில் கள்ளக்காதல்.. ஓடிப் போன மனைவி!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கட்டடத் தொழிலாளி ஒருவர் தனது குடும்ப பொருளாதார நிலையையும் பொருட்படுத்தாமல் தனது மனைவிய மேல் படிப்பு படிக்க வைத்தார். ஆனால் கணவரையும், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு தனது கள்ளக்காதலருடன் ஓடிப் போய் விட்டார் மனைவி.
கண்ணக்கோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரசல்குமார் (27). கட்டட தொழிலாளியான இவரது மனைவி பெயர் ஷைனி. 22 வயதாகிறது. இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஷைனி பட்ட மேற்படிப்பு படிக்க விரும்பியதால் அவரை ரசல்குமார் படிக்க வைத்து வந்தார். படிப்பு தொடர்பாக அடிக்கடி நெல்லை போய் வந்தார். அப்போது டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக் காதலாக மாறியது. நேரில் பார்த்தது போக வீடு திரும்பியதும் செல்போனில் பேசியபடி இருப்பாராம் ஷைனி.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி நள்ளிரவில் ஒரு போன் வந்துள்ளது. அதை எடுத்து ஷைனி நீண்ட நேரம் பேசியுள்ளார். அடுத்த நாள் காலையில் அவர் காணாமல் போய் விட்டார். ரசல்குமார் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் வைத்திருந்த 18 பவுன் நகைகள், பணம். தனது உடைகளுடன் அவர் மாயமாகி விட்டார்.
இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுக்கவே, போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில், களியக்காவிளையைச் சேர்ந்த ஒருவருடன்தான் அதிக நேரம் அவர் போனில் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் விசாரித்தபோது அவர்தான் அந்த டிரைவர் என்றும், அவருடன் தான் ஷைனி ஓடிப் போனதும் தெரிய வந்தது. அவர்கள் தங்கிய இடத்தைக் கண்டுபிடித்த போலீஸார் அங்கு விரைந்தபோது இருவரும் அங்கிருந்து தப்பி விட்டனர். தற்போது கேரளாவுக்குப் போய் விட்டதாக கூறப்படுகிறது.
கணவரையும், இரண்டு குழந்தைகளும் பரிதவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப் போன மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications