For Daily Alerts
Just In
3 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி.. திருச்சியில் பரபரப்பு
திருச்சியில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார்.
திருச்சி: திருச்சியில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார். இவர்கள் 4 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
திருச்சி தா. பேட்டையில் வசிக்கும் தேவிகா என்ற பெண் இந்த செயலை செய்து இருக்கிறார். இவர் தன் மூன்று பெண் குழந்தைகள் மெகன்யா, கன்ஷியா, லேகா ஆகியோருடன் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.
முதலில் குழந்தைகளின் குருணை மருந்தை காதில்விட்டு கொல்ல முயற்சி செய்துள்ளார். பின் தான் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அண்டை வீட்டார்கள் தற்போது அவர்கள் 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
Comments
English summary
Woman named Devika attempts suicide with 3 daughters named Mehanya, Kanshya, Lekha in Trichy. They have rescued and admitted in Hospital.
Story first published: Wednesday, February 14, 2018, 21:01 [IST]