கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் திராட்சை போன்ற “முத்துப்பிள்ளை” கட்டிகள்- மருத்துவர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் அருகே சில மாதங்களுக்கு முன்பு 10 குழந்தைகள் பெற்ற தாய் மரணமடைந்ததைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள், சுகாதாரத்துறை சார்பில் வட்டாரம்தோறும் கர்ப்பிணிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை ஆலோசனை வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது.
திண்டுக்கல் அருகே நத்தத்தில் நடந்த மருத்துவ முகாமில், 65 கர்ப்பிணிகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் 26 பேருக்கு பிரசவத்துக்கு சிக்கலான பல்வேறு வகையான நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
நத்தம் உலுப்பகுடியை சேர்ந்த 6 மாத கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தைக்கு பதிலாக கொத்து கொத்தாக திராட்சை போல் உருண்டைகள் காணப்பட்டன. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அந்த பெண்ணை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரவிகலா, அப்பெண்ணை ஸ்கேன் செய்து பார்த்தபோது அப்பெண் வயிற்றில் திராட்சைபோல் ஏராளமான உருண்டைகள் காணப்பட்டன. இந்த கருவுக்கு மருத்துவ உலகில் முத்துப்பிள்ளை என்போம்.
இந்த கருவை வளர்ச்சியடையாவிட்டால் வேர்வேராக அவரது உடல் முழுவதும் பரவி கர்ப்பப்பை வரை நுழைந்துவிடும். இது ஒருகட்டத்தில் கேன்சராகக்கூட மாற வாய்ப்புள்ளது. அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்தால் அது அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
அதனால் அந்த பெண்ணுக்கு பிரவசம் நடக்காமல் வாய் வழியாக அந்த முத்துப்பிள்ளையை நவீன அறுவை சிகிச்சை மூலம் எடுக்க உள்ளோம். இந்த முத்துப்பிள்ளையை மருத்துவ உலகில் மோலார் பிரக்னன்சி வெசிகுலர் மோர் எனவும் கூறலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications