சேலம்: ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் நிர்வாண சடலம்...
சேலம்: சேலத்தில் ரயில் தண்டவாளத்தில் நடுத்தரவயது பெண் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் ஜங்சன் அருகில் உள்ளது கந்தம்பட்டி. இங்கு ஈரோடு - சேலம் ரெயில் பாதை உள்ளது. இந்த பாதையில் இருந்து இன்று அதிகாலை நாய் ஒன்று பெண் ஒருவரின் கையை வாயில் கவ்வி எடுத்து கொண்டு ஓடியது. இதை இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் நாயை விரட்டி விட்டனர். இதனால் நாய் கையை கீழே போட்டு விட்டு ஓடிவிட்டது.
இந்த கை யாருடையது என பார்க்க பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள ரயில்பாதை பக்கம் சென்றனர். அப்போது அங்கு 45வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று நிர்வாண நிலையில் கிடந்தது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தண்டவாளத்துக்கு நடுவில் அந்த பெண் பிணமாக கிடந்தார். இதை பார்த்து பொதுமக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி உடனே அவர்கள் சேலம் ஜங்சன் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்லத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், ஏட்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடம் விரைந்து சென்று பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றினர்.
இந்த சடலம் கிடந்த இடம் அருகில் சிறிய சுருக்குப் பை ஒன்று இருந்தது. இதில் சுண்ணாம்பு டப்பா, சிறிய டார்ச் லைட் இருந்தது. இதை போலீசார் கைப்பற்றி இந்த பெண் யார்? எந்த ஊர்? என விசாரணை நடத்தினர்.
இவரை யாரும் கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொன்று பிணத்தை ரயில் பாதையில் வீசினரா? அல்லது வேறு காரணத்தால் இறக்க நேரிட்டதா? அல்லது ரயில் பாதையை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? என்றும் விசாரணை நடக்கிறது.
சடலத்தின் அருகே புளு கலர் பூப்போட்ட சேலையும் கிடந்தது. இதையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அந்தப்பெண்ணை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்பதால் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் போலீசார் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications