விபச்சார தொழிலை கெடுத்தார்... திட்டினார்... எரித்துக் கொன்றேன்.: பெண் வாக்குமூலம்
தன்னை விபச்சாரி என திட்டியதால் வீட்டு உரிமையாளரை தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை: வீட்டை வாடகைக்கு விட்ட உரிமையாளர், தன்னை விபச்சாரி என திட்டியதால் தனது காதலனுடன் சேர்ந்து அவரை எரித்துக் கொலை செய்ததாக ஆயிரம் விளக்குப் பெண் கொலை வழக்கில் கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மக்கீஸ் கார்டன் குடிசைப்பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் தனலெட்சுமி என்ற பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார்,தனலட்சுமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சுகந்தி என்ற இளம்பெண்ணின் மேல் சந்தேகமடைந்தனர்.

காவல்துறையினரின் கேள்விகளுக்கு முரண்பாடாக பதிலளித்த சுகந்தி,இறுதியில் தனது காதலனுடன் சேர்ந்து தனலட்சுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதனை தொடர்ந்து சுகந்தியையும்,அவரது காதலனான யுவன் என்பவனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த பெண் தனது வாக்குமூலத்தில்,
"என்னுடைய கணவன் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.பிழைப்புக்கு வேறு வழியில்லாததால் வீட்டில் வைத்து விபச்சாரம் செய்து வந்தேன்.இதனால் அடிக்கடி என் வீட்டிற்கு ஆண்கள் வந்து சென்றனர்.
இதனை அறிந்த வீட்டு உரிமையாளர் தனலெட்சுமி,என்னை விபச்சாரி என திட்டி அசிங்கப்படுத்தியதோடு,இனி வீட்டிற்கு எந்த ஆண்களும் வரக்கூடாது என கூறிவிட்டார். இதனால் தொழில் பாதிக்கப்பட்டதோடு,வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன்.
வீட்டு வாடகை கொடுக்காததால்,வீட்டை காலி செய்யுமாறு தனலெட்சுமி நெருக்கடி கொடுத்தார். தண்ணீர் கேன் போடும் போது பழக்கமான எனது காதலன் யுவனுடன் சேர்ந்து தனலெட்சுமியை கொல்ல திட்டமிட்டேன். சம்பவத்தன்று தனலெட்சுமியை கடத்தி சென்று கொலை செய்த பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தோம். ஆனால் கடைசியில் போலீசில் மாட்டிக் கொண்டோம் என சுகந்தி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு கடைசியில் உயிரையும் பறிகொடுத்துள்ளார் தனலட்சுமி என்று ஆயிரம் விளக்கு பகுதிவாசிகள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications