அடடடடா.. ஆடி தெருக்கூத்தை விட இந்த மனைவியோட கூத்து பெரும் கூத்தா இருக்கேய்யா!
கணவனின் மர்ம உறுப்பை கடித்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video

குடியாத்தம்: கணவன் ஆடி மாத தெருக்கூத்தை பார்க்க போன நேரத்தில், அவரது மனைவி வீட்டில் அதைவிட ஒரு பெரிய கூத்து செய்துள்ளார்.
புதுசா என்ன இருக்க போகிறது? கள்ளக்காதல்தான். ஆனால் தன் கள்ளக்காதலுக்காகவும், தன் கள்ளக்காதலனுக்காகவும் இந்த பெண் செய்த காரியம்தான் பயங்கரமானது, அதிர்ச்சியானது, கொடுமையானது. அதுதான் இது.

கிராமத்து தெருக்கூத்து
வேலூர் மாவட்டம் துரைமூலை கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தாமரை - ஜெயந்தி தம்பதி. செந்தாமரைக்கு வயது 50, ஜெயந்திக்கு 40 வயது. செந்தாமரை கூலி வேலை செய்து வருபவர். இது ஆடி மாதம் என்பதால் இவர்களது கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் தெருக்கூத்தும் நடைபெற்றுள்ளது. இந்த தெருக்கூத்தை பார்க்க மனைவியை அழைத்துள்ளார் செந்தாமரை. ஆனால் ஜெயந்தி வரவில்லை என்று கூறிவிட்டதால் தான் மட்டும் சென்றுள்ளார்.

ஆத்திரம் அடைந்த செந்தாமரை
தெருக்கூத்து பார்த்துவிட்டு சீக்கிரமாகவே செந்தாமரை வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது வீட்டில் ஜெயந்தி, அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞனுடன் ஜாலியாக இருப்பதை கண்ணாலேயே பார்த்துவிட்டார். இதனால் அங்கு ஒரு பிரளயமே வெடித்தது. மனைவியின் செயலை கண்ணால் பார்த்ததால் மிகுந்த ஆத்திரம் அடைந்த செந்தாமரை, அந்த இளைஞனின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டார்.

மர்ம உறுப்பை கடித்தார்
தன் கள்ளக்காதலனை விட்டுவிடுமாறும், அடிக்க வேண்டாம் என்றும் ஜெயந்தி தன் கணவரிடம் சொன்னார். ஆனாலும் செந்தாமரை அந்த இளைஞரை விடவேயில்லை. எவ்வளவு தடுத்தும் கள்ளக்காதலனை விட மறுத்ததால், வெறி பிடித்த ஜெயந்தி தன் கணவனின் மர்ம உறுப்பை பலமாக கடித்தார். இதில் மர்ம உறுப்பு பாதி துண்டாகிவிட்டது. இதனால் ரத்தம் பொலபொலவென கொட்டி வலி பொறுக்க முடியாமல் செந்தாமரை அலறி துடிக்க, அந்த இளைஞனோ அதுதான் சமயம் என்று தப்பி ஓடிவிட்டார்.

இப்படியும் ஒரு பெண்ணா?
செந்தாமரை வலியால் கத்தியால் அக்கம் பக்கத்து வீட்டினர் திரண்டு வந்தனர். உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கும் அழைத்து கொண்டு போனார்கள். தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயந்தியிடம் விசாரித்து வருகின்றனர். இப்படியும் ஒரு பெண்ணா? என்று அந்த பகுதி மக்கள் "ஆடி"ப் போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications