Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் பரபரப்பு.. போலீஸ் நிலையத்தில் வைத்து சப் இன்ஸ்பெக்டருக்கு கத்திக் குத்து

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டருக்கு கத்திகுத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் வைத்து சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

அயனாவரம், ராமநாதன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் சையத் முன்னாவுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Worker cuts sub-inspector with a knife in Ayanavaram police station

இது தொடர்பாக அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர். அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அவர்கள் இரண்டு பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சையத் முன்னா மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தனை குத்த முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அவரை தடுத்தார்.

இதனால் கோபமடைந்த சையத் முன்னா கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியை வெட்டினார். இதில் அவரது கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு பணியில் இருந்த மற்ற போலீசார் சையத் முன்னாவை மடக்கி பிடித்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

பலத்த காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு கைகளில் தையல் போடப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டரை தாக்கய சையத்முன்னாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+