பாட்டு பாடியது தப்பா.. செருப்பு தைக்கும் தொழிலாளி அடித்து கொலை.. குடிகாரரின் அட்டகாசம்!
பாட்டு பாடியதற்காக கூலி தொழிலாளி அடித்து கொல்லப்பட்டார்.
விழுப்புரம்: பாட்டுப் பாடியதற்காக செருப்பு தைக்கும் தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை வேலாநந்தர் கிராமத்தை சேர்ந்தவர் காசிவேலு. முதியவரான இவர் ஊர் ஊராக சென்று செருப்பு மற்றும் ரிப்பேர் ஆன குடைகளை சரி செய்து தருவது வழக்கம். மிகவும் ஏழ்மையான சூழ்நிலையிலேயே காசிவேலு வாழ்ந்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் என்ற கிராமத்தில் செருப்பு, மற்றும் குடைகளை ரிப்பேர் செய்ய காசிவேலு சென்றார். அப்போது சாலையில் பாட்டு ஒன்றை பாடிக்கொண்டே சென்றிருக்கிறார்.
அந்த நேரத்தில் அதே ஊரை சேர்ந்த அய்யாசாமி 34, என்பவர் எதிரே வந்துள்ளார். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.
தன்னை பார்த்துதான் காசிவேலு பாட்டு பாடுகிறார் என்று நினைத்து, "என்னை பார்த்து கிண்டலா பாட்டா பாடுறே?" என்று கேட்டார். அதற்கு காசிவேலு, நான் உங்கள பார்த்து ஒண்ணும் பாடலை என்று பதிலளித்தார். "இல்லை... இல்லை... நீ என்னை பாத்துதான் பாடின, ஏன் பாடினே?" என்று அய்யாசாமி கேட்க, இருவருக்கும் வாய்த்தகராறு முற்றியது.
பின்னர் அய்யாசாமி ஆத்திரம் அதிகமாகி அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து காசிவேலுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயமடைந்த காசிவேலு அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதை பார்த்து பயந்த அய்யாசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து வந்த போலீசார் காசிவேலுவின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வலைவீசி தேடி தப்பியோடிய அய்யாசாமியையும் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications